
குஜராத் மாநிலம் அகமதாபாத் என்னும் பகுதியில் சர்கேஜ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்கு பெண் பார்த்து வந்தனர். அப்போது ஒரு வரன் இவருக்கு வந்தது. அந்த வரனில் பெண்ணின் பிறந்த தேதி மே 18 ,1991 என்று எழுதி இருந்தது. அதனால் சர் கேஜ் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வருடமாக அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சர்கேஜ் குழந்தையின்மை காரணமாக மனைவியை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பெண் வயதானவர் என்றும் அவரால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் கூறினார்கள். இதனை கேட்ட சர்கேஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து சர்கேஜ் தனது மனைவியின் ஒரிஜினல் கல்வி சான்றிதழை ஆய்வு செய்தார். அதில் அந்த பெண்ணின் பிறந்த ஆண்டு 1985 என்று இருந்தது. எனவே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த மனைவியின் குடும்பத்தினர் மீது வேதல்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள 8 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.