
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் துப்பாக்கி சூடு போட்டி இன்று நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜின்டால் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதன் மூலம் இவர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.