நடிகர்கள் மனோஜ் மற்றும் குணால் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி ஷங்கர். இந்நிலையில் இவர் நேற்றிரவு கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் பாக்யா பத்திரிகையில் எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கினார்.இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். மேலும் ‘சூர்யவம்சம்’ படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலை எழுதியுள்ளார். இவருடைய இறப்பு திரையுலகை அதிர வைத்துள்ளது