இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் போபால் சந்தையில் ஒரு ஆடு சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சையத் ஷஹாய் என்ற ஆடு விற்பனையாளர் கூறுகையில், 155 கிலோ எடையுள்ள ரப்தார் இன ஆட்டை ஏழு லட்சத்திற்கு விற்பனை செய்தேன்.
இதன் சிறப்பியல்பு மற்ற எந்த ஆட்டு இனத்தையும் விட மிக ஆக்ரோஷமானது. 150 கிலோவுக்கு மேல் வளரக்கூடியது. இது மனிதர்களை தாக்கினால் உயிரைக் கூட இழக்க நேரிடும். இந்த இனத்தின் ஆடுகள் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.
