
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன முத்தூர் அருகே உள்ள மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான பழனி தனது மனைவி சத்யாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் திருப்பதி, 16 வயதில் கேசவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பழனியின் அக்கா மகன் தர்மபுரி மாவட்டம் குண்டான் காட்டை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அந்த பகுதியில் பேக்கரி கடையில் வேலை செய்ததால் பழனியின் வீட்டில் தங்கி உள்ளார். அவருக்கும் சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிய நிலையில் இதனை அறிந்த பழனி மற்றும் அவருடைய மகன்கள் சத்யாவை கண்டித்துள்ளனர்.
ஆனால் சத்யா அவர்களின் பேச்சை கேட்காததால் நேற்று கணவன் மற்றும் மகன்கள் வழக்கம் போல வெளியில் சென்றதும் வீட்டில் சத்யா தனியாக இருந்தபோது நேற்றே பிற்பகல் அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா பிணமாக கிடந்தார். அருகிலேயே மாரியப்பன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் மாரியப்பன் சத்யாவின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் வீட்டிற்கு வந்த சத்யாவின் மகன்கள் அல்லது கணவர் சத்யாவை கொலை செய்துவிட்டு அவருடைய கள்ளக்காதலன் கழுத்தை அறுத்தார்களா அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சி செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.