2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களைத் அடிக்க முடியாமல் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிகுந்த கோபமடைந்தார். . பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு இந்திய அணியை மடக்கியது சிறப்பானதாக கருதப்பட்டது. இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியினர் 113/7 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடியாக, ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ரிஸ்வான் (31) தனது அணிக்காக அதிக ரன்களை குவித்தவர், ஆனால் அவர் ஆட்டமிழந்ததே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

வாசிம் அக்ரம் கூறியதாவது; பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி மீது கடுமையான தாக்குதலை நடத்தினார். வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பாபர் ஆசாம் நியமிக்கப்பட்டதால், இரு நட்சத்திரங்களுக்கு இடையே பேச்சு வார்த்தையில் இல்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில்.. அது குறித்து பேசிய அக்ரம்

இருப்பினும் எந்த பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் அவர் இரண்டு நட்சத்திர வீரர்களை பற்றித்தான் பேசினார் என்பது தெளிவாகத் தெரிந்தது. “ஒருவருக்கொருவர் பேச விரும்பாத வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். இது சர்வதேச கிரிக்கெட், நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். இந்த வீரர்களை வீட்டில் உட்கார வைக்கவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தொடர் தோல்விகளுக்குப் பிறகு சூப்பர் 8 ரேஸில் இருந்து பாகிஸ்தான் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.