பிரபல சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து உயிரிழந்த நிலையில் அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து சீரியல் சற்று மந்தமாக ஓடியது. இருப்பினும் வேல ராமமூர்த்தி என்ட்ரிக்கு பிறகு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது அப்பத்தா விபத்தில் உயிரிழந்ததாக ஆதி குணசேகரன் கூறிய நிலையில் எதிர்பாராத விதமாக அப்பத்தா உயிருடன் வந்து ‌ திருப்பத்தை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து ஆதி குணசேகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சகோதரர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்தனர். மேலும் அப்பத்தா உயிருடன் வந்து குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கிய நிலையில் அத்துடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவு பெற்றது.