ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.  வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . அப்படிப்பட்ட ஆதார் கார்டை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நம்முடைய ஆதார் கார்டு வேறு யாராவது கைக்கு சென்றால் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் தவறாக பயன்படுத்துவார்கள் . எனவே ஆதார் கார்டு மாஸ்க் போட வேண்டும். உண்மையிலேயே  அப்படி ஒரு வசதி உள்ளது. இது ஆதாரை பாதுகாக்க உதவுகிறது.

மாஸ்க் ஆதார் கார்டு எளிதில் டவுன்லோட் செய்து பின்னர் ஆதார் கார்டு ஆக பயன்படுத்தலாம். இது சரியான ஆவணமாகவும் கருதப்படுகிறது. மாஸ்க் ஆதார் என்பது உங்களுடைய ஆதார் முழுமையாக தெரியாமல் சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். மோசடி செய்பவர்கள் அல்லது ஹாக்கர்களிடம் சிக்காமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதாரை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு UIDAI இந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிட வேண்டும்.

அதில் 12 இலக்க ஆதாரங்கள் உள்ளிட வேண்டும். அதன்பிறகு “I want a Masked Aadhaar Card”  என்று விருப்பம் தோன்றும் அதை கிளிக் செய்து கேப்சா சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு தொடரவும். மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறை செய்த பிறகு பதிவிறக்கம் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். வழக்கமான மற்றும் மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பத்தை பெறுவீர்கள். அதை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இது மிகவும் பாதுகாப்பான ஆதார் கார்டு உள்ளது.