கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளில் இருந்து நிறைய அணை கட்டியது திமுக தான். இப்ப ஆத்தூர், முக்காணி பக்கத்துல ஒரு அணை கட்டுவதற்கு பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

திமுக அரசு அதை நிறைவேற்றுமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின்,  அதெல்லாம் ஆய்வு செஞ்சுட்டு இருக்கிறோம். ஆய்வு செஞ்ச  படி அது நடக்கும். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி எங்கெங்கே தேவைப்படுமோ,  அதற்கு உரிய தீர்வை நிச்சயம் காண்போம் என தெரிவித்தார்.

நேரில் பிரதமரை சந்தித்து வந்திருக்கீங்க சார் ? பிரதமர் உங்களுக்கு ஏதும் பதில் சொன்னாரா ? பிரதமர் ஏதும் பதில் சொன்னாரா?  நிவாரண நிதி சம்பந்தமா எதுவும் பதில் சொன்னாரா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் முக. ஸ்டாலின்,  20 நிமிடம் என்னை உட்கார வைத்து பேசினார்.  எல்லாத்தையும் விவரமாக கேட்டார். விவரமா சொல்லி இருக்கிறோம். இதெல்லாம் மனுக்களில் இருக்கான்னு கேட்டாரு. இருக்குன்னு சொன்னோம்.  நான் உடனே கவனிக்கிறேன் சொல்லி இருக்கிறார். அதுதான் நான் சொல்ல முடியும் என தெரிவித்தார்.