கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகளுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து கொல்லத்திற்கு டிசம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்திலிருந்து டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு டிசம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மங்களூருவில் இருந்து டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.