கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் நலன் கருதி சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு டிச.23, 30ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து டிச.24, 31ஆம் தேதிகளில் காலை 10.45க்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு டிச.23, 30ஆம் தேதிகளில் இரவு 11.20க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து டிச.25, ஜன.1ல் காலை 9.30க்கு தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.