பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உரத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள், முன்னணி உரம் நிறுவனங்கள் போன்றவற்றின் வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக முழுமையானவற்றிற்கு  இந்த திட்டமானது ஒப்புதல் அளிக்கிறது.

மொத்தம் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15,000 சுய உதவி குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். ட்ரோன்கள் வாங்குவதற்கு ட்ரோன் மற்றும் உபகரணங்கள் கட்டணங்களில் 80 சதவீதம் முதல் அதிகபட்சம் எட்டு லட்சம் வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும். 18 வயது மற்றும் அதற்கு அதிக வயது உள்ளவர்களில் ஒருவர் 15 நாள் கட்டாய ட்ரோன் பைலட் பயிற்சி, ஊட்டச்சத்து, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்த பத்து நாட்கள் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாட்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.