
68 வயதான பில்கேட்ஸ் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடாது ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்து விடும் என்று தெரிவித்துள்ளார். மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.