தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியினை சிறப்பாக செய்த 20 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மழை கோட் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவன், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreஅண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read more