
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, DMKவின் நீட் கையெழுத்து இயக்கம் வழக்கமான டிராமா தான். வேலை இல்லாத ஒரு கட்சி திமுக. கையெழுத்து இயக்கம்னு வேலையில்லாத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்துக்கிட்டு ரோட்ல கிளம்பி இருக்காங்க… இதுக்கு என்ன கமெண்ட் பண்றது ? பத்து வருஷமா ஆட்சியில் இருந்திருக்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கோமா ? 2014இல் இருந்து இப்போது வரை இருக்கோம். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினோமா…. இந்த அரசியலமைப்பு சட்டத்தினால் தான் இன்னைக்கு மோடி அவர்கள் பிரதமர் ஆகியிருக்காங்க.
அதனால் திருமாவளவன் அவர்கள் அந்த கட்டுக்கதையில வீட்டிலேயே வைத்துவிட்டு, உருப்படியா… எம்பியா அவர் என்ன செய்திருக்கிறார் என்று மக்கள் மன்றத்தில் வந்து பேசணும். மோடி அவர்களை திட்டுவதை தன்னுடைய முழு நேர வேலையாக வைத்திருக்கக் கொண்டு… ஒரு எலக்சனுக்கும் ஒருவ்வொரு பொய் சொல்றவங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி என்ன தெரியும் ? என தெரிவித்தார்.