வருகின்ற 25ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், பெண்கள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், 2.5 லட்சம் அரசு வேலைகள், மாவட்டம் தோறும் மகளிர் காவல் நிலையம், மகளிர் புகார்களுக்கு தனி பிரிவு, பெண் குழந்தைகள் பிறந்தால் இரண்டு லட்சம் சேமிப்பு பத்திரம் போன்ற பல அறிக்கையை பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நாட்டா வெளியிட்டு பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்