டெல்லியில் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டாம் தளத்தில் குடியிருந்த கமல் திவாரி என்பவர் பால்கனியிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்துள்ளார்.

இதனால் தனது மூன்று வயது குழந்தையை பிளாங்கெட்டில் சுற்றி கீழே தூக்கி வீசிவிட்டு தனது 12 வயது மகன் மற்றும் மனைவி பிரியங்காவுடன் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் மூன்று பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 வயது குழந்தையின் நிலைமையும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.