
வேலூர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா தொடங்கியது. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்.
ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல. தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக. 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை என திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.