கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும், நிராகர்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.