ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய ஏ சி டி சி நிறுவனம் 20000 இருக்கைகளுக்கு மட்டுமே காவல்துறையில் அனுமதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 400 பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஏ சி டி சி நிறுவனம் காவல்துறைக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் மலக்குமா நெஞ்சம் இசை கச்சேரியில் நடந்த தவறுக்கு அந்த நிறுவனம் முழு பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் ஏ ஆர் ரகுமானுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.