மறைந்த நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு வீட்டை கட்டி வந்துள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி என மூவரையும் வைத்து தனது கனவு வீட்டை திறக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டு உள்ளார். இது பற்றி நடிகர் மாரிமுத்து தன்னிடம் கூறி இருப்பதாக நடிகர் ராமமூர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.