இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆதார் கார்டு இணைப்பது பத்து வருடங்களுக்குள் ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இலவசமாக ஜூன் 11ஆம் தேதி வரை ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் கார்டு புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவை மூலமாக தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடித்து விடலாம் எனவும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.