மத்திய அரசு பொதுமக்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. விரைவில் அனைவருக்கும் அதன் பலன்கள் கிடைக்கும். அது அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு திட்டமாகும். அதாவது  நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மேரா பில் மேரா அதிகார்’ திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதால், மொபைல் செயலியில் ஜிஎஸ்டி விலைப்பட்டியலைப் பதிவேற்றும் நபர்களுக்கு வெகு விரைவில் வெகுமதி கிடைக்கும்.  இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம், மொபைல் செயலியில் ஜிஎஸ்டி விலைப்பட்டியலைப் பதிவேற்றும் நபர்களுக்கு வெகுமதி கிடைக்கும்.
ஒரு நபர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 25 உண்மையான விலைப்பட்டியல்களை இந்த செயலியில் பதிவேற்ற முடியும். இந்நிலையில், 3 மாதங்களுக்கும் ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.