உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மெஹந்தி லால். 60 வயதான இவருக்கு 45 வயதான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண்ணோடு இவர் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 19 வயது மகளும் உள்ளார். அவரும் இவர்களோடு வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 60 வயதான லால் கடந்த 21 ஆம் தேதி காட்டுப்பகுதியில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரணையில் மெஹந்திலால் தன்னுடைய நாற்பத்தி ஐந்து வயது காதலியின் மகளை அடைய வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய மகள் வயது என்று கூட பார்க்காமல் அந்த பெண்ணை இரண்டு முறை பாலில் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்.

கடந்த 20ஆம் தேதி தூங்கும் பொழுது லால் மீண்டும் அந்த பெண்ணிடம் அத்துமீறி உள்ளார். இந்த கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத மகள் தன்னுடைய அம்மாவிடம் நடந்துவற்றை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் லாலை கொலை செய்ய முடிவு எடுத்து மயக்கம் மருந்து ஊற்றிக் கொடுத்து தன்னுடைய மகள் உதவியுடன் லாலின்  அந்தரங்க உறுப்பை வெட்டி காட்டுப் பகுதியில் வீசி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.