பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த சம்பவம் காண்பிக்கிறது என்ற விமர்சித்துள்ளார்.

பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.