சித்தராமையா, சிவக்குமார் ஆகிய இருவரிடையே கர்நாடக முதல்வருக்கான போர் முற்றி வரும் நிலையில், இதில் இருந்து பின்வாங்கும் வகையில் சிவக்குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து முதல்வர் தொடர்பாக காங். தலைவர் கார்கே, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். அடுத்த 24 மணிநேரத்துக்குள் கர்நாடக முதல்வரின் பெயர் வெளியாகலாம் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.