அரசு வாகனங்களில் ‘அ’, ‘G’ என குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சில அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்திலும் & எழுத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட குறிப்பில், ‘பொதுமக்கள், அரசு பணியாளர்கள் என பாகுபாடின்றி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி. எந்த வகையான வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும், அதுதொடர்பாக போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதள பக்கத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அதன் அடிப்படையில், உரிய மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.