தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் அனுஷ்கா. இவர் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் கம்பீரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி குறைக்க மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. பின் பாகுபலி 2 திரைப்படத்திற்காக சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அனுஷ்காவிற்கு அரிய வகை நோய் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அந்த நோய் என்னவென்றால் அவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார் என பேட்டியில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளார்கள்.