நடிகர் சேதுராமன் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா, 50 / 50 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார். இவர் திடீரென சென்ற 2020 ஆம் வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இவரின் மனைவி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை உருக்கமாக பதிவிட்டிருக்கின்றார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஏழு வருடங்கள் முன்பான இந்த நாளை பார்க்கின்றேன். என்னை சுற்றி எவ்வளவு மாறினாலும் இந்த நாளை நினைக்கும் போது நமது காதல் உணர்வு அப்படியே இருக்கின்றது. இந்த நாளை நாம் எப்போதும் கொண்டாடியது கிடையாது.

அப்படி கொண்டாடுவதில் உங்களுக்கு நம்பிக்கையும் கிடையாது. ஆனால் நான் ஒவ்வொரு வருடமும் எனது உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே தான் வருகின்றேன். இந்த நினைவுகளை நான் நேசிப்பேன். இனிவரும் வருடங்களிலும் இதைத் தொடர்ந்து நான் செய்வேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார். இவரின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.