தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகின்றார்.

ஜெயம் ரவியுடன் இறைவன் திரைப்படத்திலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்ற நிலையில் மித்ரன் திரைப்படத்தில் ஒன்றிலும் கமிட்டாகி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா பிரபல முன்னணி நடிகரின் மீது கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. நடிகர் அஜித் மீது தான் நயன் கோபத்தில் இருக்கின்றாராம் என கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகின்றது.

அதற்கு காரணம் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் என கூறப்படுகின்றது. ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் திருப்தி இல்லை எனக் கூறி இயக்குனரை மாற்றுமாறு அஜித் கூறியதால் அவர் மீது நயன்தாரா கோபத்தில் இருக்கின்றாராம்.

இதன் காரணமாக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இனி அஜித்துடன் நடிக்க போவதில்லை என நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதில் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித் குமாரின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றார். அஜித் மீது நயன்தாரா கோபத்தில் இருந்தால் விக்னேஷ் சிவன் இப்படி அஜித் போட்டோவை பகிர்ந்திருக்க மாட்டார். இதனால் அஜித் மீது நயன்தாரா கோபத்தில் இருக்கின்றார் என்ற தகவல் வதந்தியே என்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.