கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ராவை விமர்சித்த விமர்சகரை கடுமையாக ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள்.

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர் மட்டுமே பங்கேற்றார்கள்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இவர்களின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். திருமணம் முடிந்தவுடன் தனது மனைவியை டெல்லியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சித்தார்த் மல்கோத்ரா அழைத்துச் சென்று இருக்கின்றார். இந்த நிலையில் கியாரா கர்ப்பமாக இருப்பதால்தான் அவசர அவசரமாக திருமணம் நடந்திருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதை பார்த்த கியாராவின் ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள்.

பாலிவுட் விமர்சகரான கமால் ஆர்.கான் என்பவர் பெயரை குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, முதலில் கர்ப்பமாகிவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது பாலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங்காக இருக்கிறது. பாலிவுட்டில் அண்மையில் நடந்த திருமணம் கூட இதே ஃபார்முலா தான் என கூறியிருக்கின்றார். இவரின் வீட்டைப் பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, யார் கர்ப்பமானால் உங்களுக்கு என்ன? அதான் அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதே? இப்படியே பாலிவுட்டில் இருப்பவர்கள் பற்றி குறை சொல்லிகிட்டே இருந்தால் யாரும் மதிக்க மாட்டாங்க என பலரும் அவரை விளாசி வருகின்றார்கள்.