சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் சிக்கலில் சிக்கி உள்ளது.

சசிகுமாரின் புதிய திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி இருக்கின்றது. சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் அயோத்தி திரைப்படம் ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மத பிரச்சனைகளை பேசும் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த நரன் படத்தின் கதை தான் எழுதிய வாரணாசி என்ற சிறு கதையை போல இருப்பதாகவும் இதற்காக எந்த உரிமம் தன்னிடம் பெறவில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

அயோத்தி திரைப்படத்திற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியிருப்பதால் தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் நரன் அண்மைக்காலமாக கவனிக்கப்படும் எழுத்தாளராக இருக்கின்றார். இவரின் சிறுகதைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சுதா கங்காரா நரனின் காதல் கதை ஒன்றை இணைய தொடராக எடுக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.