ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படபிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தன.

இது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் படத்தின் இயக்குனர் மாறுபடலாம் எனவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் அஜித்திடம் விக்னேஷ் சிவன், ஏகே 62 திரைப்படத்தின் கதையை கூறியிருக்கின்றாராம். ஆனால் அதை அஜித்திற்கு பிடிக்கவில்லையாம். வேறொரு கதையை தயார் செய்யும்படி கூறி இருக்கின்றாராம்.

ஏகே 62 விக்னேஷ் சிவன் கதையை நிறுவனத்திடம் கூறியிருக்கின்றார். இதைக் கேட்ட லைக்கா நிறுவனம் கடுமையான கோபத்தில் இருக்கின்றதாம். கதையை தயார் செய்ய எட்டு மாதங்கள் நேரம் கொடுக்கப்பட்ட போதிலும் சரியான கதையை உருவாக்காமல் சாதாரண கதையை அவர்களிடம் விக்னேஷ் சிவன் கூறி இருக்கின்றாராம். இதனால் விக்னேஷ் சிவன் மீது லைக்கா நிறுவனம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவரை விளாசுவதாகவும் தெரிவித்தனர். அதனால்தான் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.