கீழ ராமநதி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் கீழராமநதி ஊராட்சியில் ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஊராட்சி அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திரண்டு பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைவர் துணைத் தலைவர், உறுப்பினர்கள் என பல பங்கேற்றனர். இதுபோல நெடுங்குளம் ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.