கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, வடக்கு,கடலையூர் ரோடு மற்றும் வள்ளுவர் நகர் பகுதிகள், அன்னை தெரசா நகர், பாரதி நகர், தெற்கு இலந்தைக்குளம், பசுவந்தனை, எம். பொம்மையாபுரம், இளவேலங்கால், பசுவந்தனை, செமப் புதூர், தெற்கு பகுதிகளுக்கு லாயல் மில் காலனி, கணேஷ் நகர், அத்தை கொண்டான் ரோடு சித்தி விநாயகர் கோவில், தெற்கு கழுகுமலை, ராமனூத்து, எட்டையாபுரம் நகர் பாரதி மணிமண்டபம், பீக்கிலிப்பட்டி, சிவஞானபுரம், தெற்கு இலந்தைக்குளம், இளவேலங்கால்,  உள்ளிட்ட இடங்களில் இந்த முகமானது நடைபெற்றது.