தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி இதற்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவரது கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் தேர்வு கூட ஹால் டிக்கெட் களில் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதாவது இருந்தால் சிவப்பு நிறம் மையால் பிழையை திருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.