தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பாக செயல்பட்ட பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ரவுடிகளை கைது செய்ய செல்லும்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதால் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்றும் டிஜிபி சைலேந்திரபாபு திட்டவட்டமாக தெரிவித்தார்.