அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளன. அதுவரை என்ன நடக்கும் என்று இன்று எதுவும் சொல்ல முடியாது. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணியை முடித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.