2024 டி20 உலககோப்பை அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார்..

2024 ஐபிஎல்லின் 16 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் நேற்று  விசாகப்பட்டினத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரேன் அதிரடியாக 39 பந்துகளில் 7பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 85 ரன்கள் குவித்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் 18 ரன்களில் அவுட் ஆன போதிலும், அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களும், அதிரடியாக ரிங்கு சிங் 8 பந்துகளில் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்) 26 ரன்களும் குவித்தனர். அதன்பின் ஆண்ட்ரே ரசல் அவர் பங்குக்கு அதிரடியாக 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸ் உட்பட 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 55 ரன்களும், அதேபோல ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்..

இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது கேகேஆர்.. சுனில் நரைன் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2024 ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக ரிங்கு சிங்கின் 26 ரன்களுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள்ஆல்ரவுண்டர் யூசுப் தான் அவரை ஆதரித்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்  தனது எக்ஸ் பக்கத்தில், ” ரிங்கு சிங் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.