துல்லியமான யார்க்கரால் தன்னை வீழ்த்திய இஷாந்த் சர்மாவை பார்ட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல்..

2024 ஐபிஎல்லின் 16 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் நேற்று  விசாகப்பட்டினத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரேன் அதிரடியாக 39 பந்துகளில் 7பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 85 ரன்கள் குவித்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் 18 ரன்களில் அவுட் ஆன போதிலும், அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர்.

 

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களும், ரிங்கு சிங் 8 பந்துகளில் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்) 26 ரன்களும் குவித்தனர். அதன்பின் ஆண்ட்ரே ரசல் அவர் பங்குக்கு அதிரடியாக 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸ் உட்பட 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

டெல்லி அணியின் துவக்க வீரர் வார்னர் 18 ரன்களிலும், பிருத்வி ஷா 10 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரெல் ஆகியோர் டக் அவுட் ஆகினர். டெல்லி அணி 4.3 ஓவரில் 33 ரன்களுக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியபோது, ரிஷப் பண்ட் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

 

இதையடுத்து ரிஷப் பன்ட் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேபோல ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 54 ரன்கள்  சேர்த்து வெளியேறினார். பின் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது கேகேஆர்.. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்தை பெற்றுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் சீசனின் முதல் 3 போட்டிகளில் கேகேஆர் வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வரலாறு படைத்தார். அதேசமயம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றுள்ளது கொல்கத்தா அணி. முன்னதாக மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது..

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஆண்ட்ரே ரசலுக்கு இசான் சர்மா ஒரு யார்க்கரை வீசினார். தனது அனுபவத்தை பயன்படுத்தி இன்ஸ்விங் யார்க்கர் மூலம் ரஸ்ஸலை வீழ்த்தினார். சற்று எதிர் பார்க்காத ரஸ்ஸல் அப்படியே கீழே விழுந்தார். ஒரு சவாலான பந்துவீச்சு இருந்தபோதிலும் அனுபவிக்க வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை பாராட்டினார் ரஸ்ஸல்.. அவர் தனது பேட்டால் கையைத் தட்டி பாராட்டிவிட்டு நடந்து சென்றார். ரஸ்ஸலின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.