லிபியா நாட்டில் உள்நாட்டிலேயே கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி குழப்பம் செய்து வருவதால் அங்கு நிலையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு படகின் மூலம் அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். இந்த பயணத்தின் போது அவர்களுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. எனினும் வேறு வழி இன்றி அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு படகு மூலம் அகதிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த படகு நேற்று முன்தினம் லிபியா கடற்கரை பகுதியில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து ஐநாவுக்கான புலம்பெயர்வோர் அமைப்பு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது “7 அகதிகள் கடற்கரை பகுதியில் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன 73 அகதிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளது.