மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்  மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 70 மருந்துகள் தரமற்றவையாக உள்ளது என அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும், மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது.

அதேப்போல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் 1,375 மருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இரும்பு சத்து, முடக்கு வாதம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 70 வகையான மருந்துகள் தரம் அற்றவையாக இருந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.