திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரயில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த மல்லிகாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தாங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.