தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. டி என் பி எஸ் சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 2024 ஜனவரி மாதம் வரை 27,858 பேருக்கும், அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32, 709 பேருக்கும், நீதித்துறையில் 5 ஆயிரத்து 981 பேருக்கும், பள்ளிக்கல்வித்துறையில் 1847 பேருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.