தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கலில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல அம்சங்கள் இடம்பெறும் என்றும் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.