அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரங்குடி பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.