இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54 வருடங்களாக அமைச்சரவையில் இருக்கிறேன் என்று கூறினேன்.

அதோடு ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் என்றும் அவரிடம் கூறினேன். இதைக் கேட்ட உடன் பிரதமர் மோடி வியந்து போனார். உடனே அவர் என்னிடம் 54 ஆண்டுகளா என்று கேட்டார். மேலும் இதுபோன்று இந்தியாவிலேயே யாருமே இல்லை என்று கூறி தன்னை புகழ்ந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.