கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட PM Cares நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.

2019 – 2020 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 0.40 கோடி ஆகும்.

2020 – 2021 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 494.92 கோடி ஆகும்.

2021 – 2022 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 40.12 கோடி ஆகும்.

இதை தவிர்த்து தன்னார்வ பங்களிப்பாக மூன்று வருடத்தில் நிதி ரூபாய் 12,156.38 பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மூன்று வருடத்தில் PM Cares-ல் வெளிநாட்டு பங்களிப்பு மற்றும் தன்னார்வ பங்களிப்பு சேர்த்து 12,691.82 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.