கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அதோடு கடலில் 30-க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக தேடுதல் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையில் விபத்து நடந்த இடத்துக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் இந்த விபத்து குறித்து பேசிய பினராயி விஜயன், நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.