மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி வலியால் அழுதுக்கொண்டே பெற்றோரிடம் சென்றுள்ளார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதோடு சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் ராயை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ராய் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.